Tuesday, February 22, 2011

நியூசி., பூகம்பம்: வீரர்கள் அதிர்ச்சி

சென்னை: நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பூகம்பம், அந்த அணி வீரர்களை அதிகம் பாதித்துள்ளது.
நியூசிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கிறைஸ்ட்சர்ச். இங்கு நேற்று திடீரென பூகம்பம் ஏற்பட்டது. இது "ரிக்டர்' அளவு கோலில் 6.5 ஆக பதிவானது. இதனால் அங்கிருந்த கட்டடங்கள் நிலை குலைந்து இடிந்து விழுந்தன. இதில் 65 பேர் பலியாகி உள்ளதாக தெரிகிறது. தவிர, சேதம் அதிகம் என்பதால் பலியானவர்கள் எண்ணிக்கை <உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அந்நாட்டு வீரர்களை அதிகம் பாதித்துள்ளது.
இதுகுறித்து துவக்க வீரர் மார்டின் கப்டில், தனது "டுவிட்டர்' இணையதளத்தில்,"" கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் இப்படி நடந்தது வருத்தமாக உள்ளது. அங்குள்ள மக்களை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது,'' என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நியூசிலாந்து கிரிக்கெட் வெளியிட்ட செய்தியில்,"நேற்று காலை எழுந்த போது, கிறைஸ்ட்சர்ச்சில் மீண்டும் பூகம்பம் என்ற செய்தி வந்தது. அங்குள்ள அனைவரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்,' என, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment