Monday, February 21, 2011

சச்சின் நலமாக உள்ளார்

பெங்களூரு: சச்சினுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை என்றும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாவது உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதில் சச்சின் 28 ரன்கள் எடுத்திருந்த போது, ரன் அவுட்டானார். இரண்டாவது போட்டி வரும் பிப். 27 அன்று பெங்களூருவில் நடக்கிறது.
இதனிடையே நேற்று முன்தினம் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, இடது முழங்காலில் லேசான வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக, மும்பையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் "எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய அணியின் மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" முழங்காலில் ஏற்பட்ட வலி, ஏற்கனவே உள்ளது தான். இது லேசான பிரச்னை. இதுகுறித்து அதிக கவலைப்படத் தேவையில்லை. தவிர, "எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் அறிக்கையும் தெளிவாக உள்ளது. இதனால் சச்சின் அடுத்த (பிப். 27) போட்டியில் கட்டாயம் பங்கேற்பார்,'' என்றார்.

No comments:

Post a Comment