Saturday, February 19, 2011

இசைக்கு தடை!

அம்பாந்தோட்டை: போட்டிகளை காண வரும் ரசிகர்கள் இசைக்கருவிகள், மதுபான பொருட்களை கொண்டு வர, இலங்கை தடை விதித்துள்ளது.
இலங்கையின் அம்பாந்தோட்டையில் இலங்கை, கனடா அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை லீக் போட்டி இன்று நடக்கிறது. இதைக் காண வரும் ரசிகர்களுக்கு இலங்கை பாதுகாப்பு படையில் பல்வேறு தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தலைமை அதிகாரி மகிந்தா பாலசூரியா கூறியது:
போலீஸ், ராணுவ வீரர்கள் என யாராக இருந்தாலும், சோதனைக்குப் பின்தான் மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படும். மதுபானம் கொண்டுவருதல், குடித்துவிட்டு வருபவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர். தவிர, கூர்மையான பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள், காலி டப்பாக்கள், பட்டாசு பொருட்களுக்கும் தடை விதித்துள்ளோம். மற்றபடி பேனர்கள் கொண்டு செல்லலாம். மைதானத்தில் எவ்வித எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பக் கூடாது.
இவ்வாறு பாலசூரியா கூறினார்.

No comments:

Post a Comment