Saturday, February 19, 2011

அப்ரிதி வேண்டுகோள்

கராச்சி: ""உலக கோப்பை தொடரில் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்பட் வேண்டும்,'' என, பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக கோப்பை பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்திடம் 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுகுறித்து அப்ரிதி கூறியது:
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோல்வியடைந்தது வருத்தம் தருகிறது. இதற்காக நாம் மன்னிப்பு கேட்பது, முதல் முறையல்ல. இது தொடரக்கூடாது. அணியின் அனைத்து வீரர்களும் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பான திறமை வெளிப்படுத்த வேண்டும். சோதனை செய்து பார்ப்பதற்கு இனி நேரமில்லை. சீனியர் வீரர்கள் உட்பட அனைவரும் பொறுப்பெடுத்து செயல்பட வேண்டும். அக்தரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது, வழக்கமான ஒன்று தான். ஐ.சி.சி., எந்த அணியிடமும், யாரிடம் வேண்டுமானாலு<ம் சோதனை நடத்தும்,'' என்றார்.

No comments:

Post a Comment