Monday, February 21, 2011

டிக்கெட் விலை படு வீழ்ச்சி!

கொழும்பு: இலங்கையில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டின் விலை, பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைக்கண்டத்தில் தற்போது பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கும் போட்டிகளைத் தவிர, மற்ற ஆட்டங்களுக்கு ரசிர்கர்கள் வருகை குறைவாக உள்ளது. இத்தொடரில் இலங்கையில் மட்டும் 12 போட்டிகள் நடக்கவுள்ளன.
நேற்று முன்தினம் அம்பாந்தோட்டையில் நடந்த இலங்கை, கனடா இடையிலான போட்டியை காண, 35 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர். நாளை இங்கு பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதவுள்ளன. இதற்கும் அதே அளவிலான ரசிகர்கள் வருகையை இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) எதிர்பார்க்கிறது.
இதுகுறித்து எஸ்.எல்.சி., உலக கோப்பை இயக்குனர் சுராஜ் தண்டெனியா கூறியது:
வழக்கமான ரசிகர்களை விட, கூடுதலாக 10 சதவீத ரசிகர்கள் வந்தாலே மகிழ்ச்சி தான் என்று, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் சவாலானது. இதற்காக இலங்கை தவிர, மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதாவது 1000 ரூபாய் டிக்கெட்டின் விலை, 400 ரூபாயாக குறைக்கப்படும்.
எங்களுடைய முக்கிய நோக்கம், அனைத்து மக்களையும் போட்டிகளை காணச் செய்வது தான். மற்றபடி இந்த உலக கோப்பை தொடர் மூலம் நாங்கள் லாபம் எதிர்பார்க்கவில்லை. தவிர, "ரேடியோ' நிகழ்ச்சிகளில் போட்டிகளை அறிவித்து, அதன்மூலமும் ரசிகர்களை மைதானத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.
இவ்வாறு சுராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment