Wednesday, February 16, 2011

யூசுப் பதான்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்கிறார் யூசுப் பதான். சமீபத்திய நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் மின்னல் வேகத்தில் சதம் அடித்து, திறமை நிரூபித்தார். இக்கட்டான நிலையில் களமிறங்கி, அணியை சரிவிலிருந்து மீட்பதே இவரது மிகப் பெரும் பலம். சுழற்பந்துவீச்சிலும் கைகொடுப்பதால், அணியின் ஒரே "ஆல்-ரவுண்டராக' வலம் வருகிறார். இவரது வாணவேடிக்கை உலக கோப்பை போட்டிகளிலும் தொடர வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

No comments:

Post a Comment