Saturday, February 19, 2011

கோலாகல கலைநிகழ்ச்சிகளுடன் உலககோப்பை துவக்கவிழா

தாகா: பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தாகாவில் கோலாகலமாக துவங்கியது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரை நடத்துகின்றன. போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் துவங்குகின்றன. இதன் துவக்கவிழா இன்று வங்கதேசத்தின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. 135 நிமிடங்கள் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரபல பாடகர் பிரயான் ஆடம்ஸ், இந்திய பாடகர் சோனு நிகாம் போன்றவர்கள் பங்கேற்றனர். முன்னதாக எட்டு முன்னணி வங்கதேச பாடகர்கள் பங்கேற்ற 50 நிமிட நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் ருனா லைலா, சபீனா யாஷ்மின், கிராமிய பாடகர் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்குப்பின் 14 நாடுகள் பங்கேற்கும் 43 நாட்கள் நடக்கும் கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, முறைப்படி அறிவித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில், 14 அணியின் கேப்டன்களும், மைதானத்துக்குள் அழைத்து வரப்பட்டனர். அடுத்து வங்கதேச நிதியமைச்சர் முகித், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசாத் அலி சர்கார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

No comments:

Post a Comment