Wednesday, February 23, 2011

பாண்டிங்கிற்கு தண்டனை உறுதி

புதுடில்லி: வீரர்கள் அறையில் இருந்த "டிவி' யை <உடைத்த பாண்டிங், தண்டனையில் இருந்து தப்பமுடியாது எனத் தெரிகிறது.
ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை வென்றது. இப்போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில் இருந்த பாண்டிங், வீரர்களின் "டிரஸ்சிங்' அறையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "டிவி'யை உடைத்தார். பின் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் பாண்டிங் செயல் குறித்து, குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜி.சி.ஏ.,) சார்பில் இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) புகார் தரப்பட, அதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,) அனுப்பியது.
இதுகுறித்து ஐ.சி.சி., செய்தித்தொடர்பாளர் காலின் கிப்சன் கூறுகையில்,"" எங்களிடம் புகார் வந்தது உண்மைதான். பாண்டிங்கின் செயல் கிரிக்கெட் விதிகளை மீறிய செயல் தான். தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பயணத்தில் உள்ளனர். இதனால் அவர்களிடம் தொடர்பு கொள்ளும் வரை, புகார் குறித்த எந்தவிபரமும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.

No comments:

Post a Comment