Sunday, February 20, 2011

உலககோப்பை கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி

அம்பாந்தோட்டை : "ஏ' பிரிவில் இன்று நடக்கும் உலக கோப்பை லீக் போட்டியில், பலம் வாய்ந்த இலங்கை அணி, கனடாவை சந்திக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி 50ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது. ஜெயவர்த்தனா 100 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் களமிறங்கியுள்ள கனடா அணி 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சார்பில் குல‌சேகரா மற்றும் பெரேரா தலா 3 விக்கெட்டுகளும், முரளிதரன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 2003ல் நடந்த உலக கோப்பை போட்டியில் கனடாவை 36 ரன்களுக்கு சுருளச் செய்து, இலங்கை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment