Saturday, February 19, 2011

அக்தருக்கு அபராதம்

தாகா: உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் அக்தருக்கு, அணி நிர்வாகம் அபராதம் விதித்தது.
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் சோயப் அக்தர் (35), விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் (29), உமர் குல் (26) ஆகியோருக்கு ஐ.சி.சி., சார்பில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் "டின்னருக்கு' சென்ற அக்தர், வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு தாமதமாக வந்துள்ளார். இதையடுத்து அக்தர் மற்றும் அவருடன் இணைந்து சென்ற வகாப் ரியாசுக்கு, பாகிஸ்தான் அணி நிர்வாகம் தலா சூ 2000 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து பி.சி.பி., யின் பவத் ஆலம் கூறுகையில்,"" அணியின் விதிக்கு அனைத்து வீரர்களும் கட்டுப்பட வேண்டும். அதனால் தான் தாமதமாக வந்த அவர்களுக்கு, அபராதம் விதித்தோம். எதிர்காலத்தில் இதுபோல நடக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment