Sunday, February 20, 2011

உலக கோப்பை கிரிக்கெட் : கென்யாவை வீழ்த்தி நியூசி., வெற்றி

சென்னை : இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில் அனுபவ நியூசிலாந்து அணி, கென்யாவுடன் விளை‌யாடின. நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் தேர்வு செய்த கென்யா, 23.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரம்பம் முதலே நியூசி., பவுலர்களின் பந்துவீச்சில் திணறிய கென்ய வீரர்கள் மளமளவென் அவுட் ஆனார்கள். அடுத்து களமிறங்கிய நியூசி அணி, 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி கண்டது.

No comments:

Post a Comment