Saturday, February 19, 2011

வான்கடேவுக்கு மீண்டும் சிக்கல்

மும்பை: மும்பை வான்கடே மைதானத்துக்கு தீயணைப்புத் துறை சான்றிதழ் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
உலக கோப்பை தொடருக்காக, வான்கடே மைதானம் கடந்த 2008 முதல் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இங்கு வரும் மார்ச் 13, 18ல் லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. தவிர, ஏப். 2ம் தேதி பைனலும் நடக்கிறது. இதற்கான அனுமதியை ஐ.சி.சி., வழங்கிய போதும், மும்பை மாநகராட்சியிடம் இருந்து இன்னும் தீயணைப்பு சான்றிதழ் வரவில்லை.
இதுகுறித்து உயர் தீயணைப்பு அதிகாரி உதய் தாக்கரே கூறுகையில்,"" வான்கடே மைதானத்தில், தீயணைப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. தீ தடுப்புக் கருவிகளை வைப்பதில், கட்டாயம் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டு முறை ஆய்வு நடத்தியும், இன்னும் சரிசெய்யவில்லை. இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு (எம்.சி.ஏ.,) கடிதம் எழுதியுள்ளோம். இதை சரிசெய்த பின், மீண்டும் ஆய்வு நடத்துவோம்,'' என்றார்.
இதுபற்றி எம்.சி.ஏ., செயலர் லால்சந்த் ராஜ்புட் கூறுகையில்,"" தீயணைப்பு துறையில் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment