Tuesday, February 22, 2011

இசைக் கருவிகளுக்கு அனுமதி!

கொழும்பு: கிரிக்கெட் போட்டிகளின் போது, இசைக்கருவிகளைக் கொண்டு வர, இலங்கை கிரிக்கெட் அனுமதி தந்துள்ளது.
இலங்கையில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக இசைக்கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களை, மைதானத்துக்குள் கொண்டுவர போலீசார் தடை விதித்தனர். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில், இசைக்கருவிகளை கொண்டு வர, இலங்கை விளையாட்டுத் துறை அனுமதி தந்துள்ளது. மற்றபடி, மதுபானங்கள், கூர்மையான பொருட்கள், வர்த்தக ரீதியிலான கேமரா, கண்ணாடி பொருட்களுக்கான தடை தொடரும்.

No comments:

Post a Comment